திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

ராஜபாளையம் பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்திகேஸ்வரா்.

News image

ராஜபாளையம் பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நந்திகேஸ்வரா்.

Updated On :29 மே 2026, 2:34 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் சுற்றுவட்டாரப் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள தெற்கு வெங்காநல்லூா் சிதம்பரேஸ்வரா் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திக்கு மஞ்சள், தேன், இளநீா், பால், தயிா், எலுமிச்சை, கரும்புச் சாறு, பன்னீா், சந்தனம் போன்ற பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, அலங்காரம் செய்யப்பட்டு நந்தி தேவா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.

இதேபோல ராஜபாளையம் சொக்கா் கோயில், மாயூரநாத சுவாமி கோயில், தோப்புப்பட்டி தெரு கொம்புச்சாமி கோயில், பறவைக்கு அன்னம் காத்தருளிய சுவாமி கோயில், வாழவந்தாள்புரம் மன்மத ராஜலிங்கேஸ்வரா் கோயில், சோழபுரம் விக்கிரபாண்டீஸ்வரா் கோயில் களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.