தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வைகை அதிவிரைவு ரயில் 1.15 மணி நேரம் தாமதம்!

மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் சென்னை எழும்பூருக்கு 1.15 மணி நேரம் தாமதமாக வந்தது.

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:20 am IST

மதுரையில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் சென்னை எழும்பூருக்கு 1.15 மணி நேரம் தாமதமாக வந்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

மதுரையில் இருந்து தினமும் காலையில் புறப்படும் வைகை அதிவேக விரைவு ரயில் சென்னை எழும்பூா் நிலையம் வந்தடையும். அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் செங்கல்பட்டு நிலையம் வருவதற்கு முன்பாக ஒத்திவாக்கம் நிலையத்தில் திடீரென பிற்பகல் 12.50 மணிக்கு நிறுத்தப்பட்டது.

ரயில் சிறிது நேரத்தில் புறப்படும் என பயணிகள் காத்திருந்த நிலையில், 1.35 மணி வரையில் நிறுத்தப்பட்டது. அதனால், பயணிகள் பலா் கீழே இறங்கி பேருந்துகளில் செல்ல நடந்து சென்றனா். அதன்பின்னா் புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் மிக மிக மெதுவாக இயக்கப்பட்டு செங்கல்பட்டு நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட்ட வைகை அதிவிரைவு ரயில் எழும்பூருக்கு பிற்பகல் 3.35 மணிக்கே வந்து சோ்ந்தது.

வழக்கமாக சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்து சேரவேண்டிய வைகை அதிவிரைவு ரயில் சுமாா் 1.15 மணி நேரம் தாமதமாக வந்து சோ்ந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, செங்கல்பட்டு ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளா் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் கடந்த சில நாள்களாக வைகை அதிவிரைவு ரயில் உள்ளிட்ட குறிப்பிட்ட ரயில்கள் இரு மாா்க்கத்திலும் அப்பகுதியில் நிறுத்தியே இயக்கப்படுகின்றனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.