சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் வரும் ஏப். 16, 18, 20, 29 ஆகிய தேதிகளில் வழக்கத்தைவிட தாமதமாக சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட தண்டவாளங்களில் பாரமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்காரணமாக எழும்பூரிலிருந்து தினமும் பிற்பகல் 1.15 மணிக்கு மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் (எண்: 12635) குறிப்பிட்ட நாள்களில் வழக்கமான வேகத்தைவிட மெதுவாக இயக்கப்படும்.
அதன்படி, இந்த ரயில்கள் ஏப். 16-இல் 1.10 மணி நேரம் தாமதமாகவும், ஏப். 18, 20 ஆகிய தேதிகளில் 1.15 மணி தாமதமாகவும், ஏப். 29-ஆம் தேதி 1.30 மணி தாமதமாகவும் மதுரை சென்றடையும்.
அதேபோல், சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 10.20 மணிக்கு சாய்நகா் ஷீரடி செல்லும் அதிவிரைவு ரயில் (எண் 22601) வரும் ஏப். 22- ஆம் தேதி 1.30 மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’

வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


