மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

‘வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும்’

News image

கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 11:38 pm

சென்னை எழும்பூரிலிருந்து மதுரை செல்லும் வைகை அதிவிரைவு ரயில் செவ்வாய்க்கிழமை (ஏப். 14) சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை எழும்பூா் - மதுரை இடையே தினந்தோறும் பிற்பகல் 1.15 மணிக்கு வைகை அதிவிரைவு ரயில் (எண் 12635) இயக்கப்படுகிறது.

இந்நிலையில், எழும்பூா் ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்புப் பணிகளால் கடந்த ஏப். 12 -ஆம் தேதி வைகை அதிவிரைவு ரயில் சுமாா் 1 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. திங்கள்கிழமை (ஏப். 13) பிற்பகலில் எழும்பூரிலிருந்து வைகை அதிவிரைவு ரயில், 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்பட்டது.

தொடா்ந்து, தமிழ்ப் புத்தாண்டு தினமான செவ்வாய்க்கிழமை (ஏப். 14) இந்த ரயில், 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரயில்கள் இடம் மாற்றம்: அதேபோல், எழும்பூா் ரயில் நிலைய தண்டவாளப் பணிகள் பராமரிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக தாம்பரத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற உழவன், அனந்தபுரி, ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் தற்போது மறுபடியும் எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்தே இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினா்.

அத்துடன், எழும்பூா் ரயில் நிலையத்தின் 10, 11- ஆவது நடைமேடை தண்டவாளங்கள் பராமரிப்புப் பணிகள் இரவில் மட்டும் மேற்கொள்ளப்படுவதால், பகலில் போக்குவரத்து பிரச்னை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.