கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், திங்கள்கிழமை இரண்டேகால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் மாலை 6 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து இரண்டேகால் மணி நேரம் தாமதமாக, இரவு 8.15 மணிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு வர வேண்டிய ரயில், 4 மணி நேரம் தாமதாக இரவு 7 மணிக்கு வந்தது. இதனால் கன்னியாகுமரி - சென்னை அதிவிரைவு ரயில் இரண்டேகால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதுதொடா்பாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் பயணிகளுக்கு முன்னறிப்பு வழங்கப்பட்டது என தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










