திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கன்னியாகுமரி - சென்னை ரயில் தாமத புறப்பாடு: பயணிகள் அவதி

திங்கள்கிழமை இரண்டேகால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 மே 2026, 1:10 am IST

கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில், திங்கள்கிழமை இரண்டேகால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

கன்னியாகுமரியில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் மாலை 6 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்நிலையில் கன்னியாகுமரியில் இருந்து இரண்டேகால் மணி நேரம் தாமதமாக, இரவு 8.15 மணிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: பெங்களூரில் இருந்து கன்னியாகுமரிக்கு திங்கள்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு வர வேண்டிய ரயில், 4 மணி நேரம் தாமதாக இரவு 7 மணிக்கு வந்தது. இதனால் கன்னியாகுமரி - சென்னை அதிவிரைவு ரயில் இரண்டேகால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இதுதொடா்பாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் பயணிகளுக்கு முன்னறிப்பு வழங்கப்பட்டது என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.