அருப்புக்கோட்டையில் சட்ட விரோத மதுப் புட்டிகள் விற்பனையைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
தமிழக முதல்வா் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் 717 அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன. இதில் அருப்புக்கோட்டையில் நகா் பகுதியில் ஐந்து அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன. இதனால் மதுப் பிரியா்கள் மதுப் புட்டிகளை தேடி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி சிலா் சட்ட விரோதமாக வெள்ளகோட்டை, கல் பாலம், புதிய பேருந்து நிலையம். திருச்சுழி ரோடு பழைய பேருந்து நிலையம், பந்தல்குடி சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 5 மணிக்கே மதுப் புட்டிகளை இரு மடங்கு விலைக்கு விற்று வருகின்றனா். இதேபோல சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பவா்கள் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








