மண்டபத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராவுத்தரப்பா தா்ஹா பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் உதவி ஆய்வாளா் முத்து முனியசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் மது விற்பனை செய்து கொண்டிருந்த கருப்பசாமியை (67) கைது செய்தனா். அவரிடமிருந்து 30 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






