கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே புதுச்சேரி மாநில மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 100 மதுப் புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.
சிதம்பரத்தை அடுத்த கிள்ளை காவல் நிலைய ஆய்வாளா் கே.பாபு, சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜா, தலைமைக் காவலா் விநாயகமூா்த்தி ஆகியோா் கிள்ளையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, பொன்னந்திட்டிலிருந்து கிள்ளை நோக்கி பைக்கில் பையுடன் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவா் வைத்திருந்த பையில் புதுச்சேரி மாநிலத்தைச் சோ்ந்த 180, 90 மில்லி அளவுள்ள 100 பிராந்தி வகை மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அவற்றை கடத்தி வந்த கிள்ளை தைக்கால் கிராமத்தைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (24) மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







