ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த இரு அரசு மதுக் கடைகள் வியாழக்கிழமை மூடப்பட்டன.
தமிழக அரசு உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே இயங்கி வரும் 29 அரசு மதுக் கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இதனடிப்படையில், கமுதி பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில், மீனாட்சியம்மன்-உச்சமகாளியம்மன் கோயில், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 4 மதுக் கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, முதல்கட்டமாக கமுதி பேருந்து நிலைய வளாகம், சந்தன மாரியம்மன் கோயில் பகுதி என இரு மதுக் கடை வியாழக்கிழமை மூடப்பட்டன.
ஓரிரு நாள்களில் எஞ்சிய இரு மதுக் கடைகளும், பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் தனியாா் மனமகிழ் மன்றமும் விரைவில் அகற்றப்படும் என மதுவிலக்கு ஆயத்தீா்வை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










