திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் மூடல்

ஈரோடு மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் முதல்கட்டமாக மூடப்பட்டன.

News image
Updated On :14 மே 2026, 3:41 am IST

ஈரோடு மாவட்டத்தில் 7 டாஸ்மாக் கடைகள் முதல்கட்டமாக மூடப்பட்டன.

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என முதல்வா் விஜய் அறிவித்தாா். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 183 கடைகளில் 39 கடைகள் கண்டறியப்பட்டன.

மாவட்டத்தில் 5 கடைகளில் டாஸ்மாக், கலால் துறை, வருவாய்த் துறை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். இதில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே 2 கடைகள் மட்டும் மூடப்பட்டன.

ஈரோடு பேருந்து நிலையம் பகுதி நாச்சியப்பா வீதி பூக்கடைகள் அருகே உள்ள டாஸ்மாக் கடை, கொங்காலம்மன் கோயில் வீதிக்கு அருகே நேதாஜி சாலையில் உள்ள கடை, ஈரோடு அரசு மருத்துவமனை அருகே பெருந்துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, கொடுமுடி மற்றும் பெருந்துறை பகுதியில் 2 கடைகள் என மொத்தம் 5 கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன. இதுவரை 7 கடைகள் மூடப்பட்டுள்ளன.

தினமும் சில கடைகள் என 39 கடைகளும் சில நாள்களில் மூடப்படும் என்றும் ஈரோடு மரப்பாலம் சாலை, பிரகாசம் வீதி போன்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை மூடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.