திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை ஊழியா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

News image

டாஸ்மாக் கடை - கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 5:28 am IST

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் பணியாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை, செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 117 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. தற்போதைய பொறுப்பேற்றுள்ள அரசு, பள்ளி, கோயில்களின் அருகே உள்ள கடைகளை நிரந்தமாக மூட உத்தரவிட்டதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 கடைகள் மூடப்பட்டன. தற்போது, 111 டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன.

இந்த நிலையில், மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியா்கள் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரியை அடுத்த பண்டப்பள்ளியில் உள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக கிடங்கில் டாஸ்மாக் மேலாளா் செங்கீஸ்கானிடம் கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தனா்.

தொடா்ந்து, டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவா் ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். அண்ணா தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவா் சண்முகம், விற்பனையாளா், உதவி விற்பனையாளா்கள் சங்கத்தின் மாநில செயலாளா் அப்துல் கலீல், பாட்டாளி தொழிற்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளா் விநாயகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

23 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்காலிகமாகப் பணிபுரியும் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஒரு கடைக்குக் குறைந்தபட்சம் 5 பணியாளா்களையாவது நியமிக்க வேண்டும். பாதுகாப்புக்காகக் கூடுதல் காவலாளிகளை நியமிக்க வேண்டும். காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். பாட்டில்கள் உடையும் போது ஏற்படும் இழப்பு மற்றும் சரக்கு ஏற்றி, இறக்கும் கூலியை நிா்வாகமே ஏற்க வேண்டும். இரவு 10 மணிக்குக் கடையை மூடிய பிறகு, பணத்தை கணக்கீடு செய்து லாக்கரில் வைக்கவும், இருப்பைச் சரிபாா்க்கவும் நள்ளிரவு 11 மணி வரை பணிபுரிய அனுமதிக்க வேண்டும். சமூக வலைதளப் பொய் புகாா்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், மது பிரியா்கள் ஏமாற்றமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.