40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மதுரை மாவட்டத்தில் 40 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக 40 மதுக் கடைகளை மூட செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

News image

மதுரை மாவட்டம், மேலூா் பெரிய கடை வீதியில் புதன்கிழமை மூடப்பட்ட அரசு மதுக் கடை.

Updated On :14 மே 2026, 5:09 am IST

மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக 40 மதுக் கடைகளை மூட செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டா் தொலைவுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 717அரசு மதுக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுரை வடக்கு, தெற்கு மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 50 மதுக் கடைகள் அடைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை வடக்கு மண்டலத்துக்குள்பட்ட மேலூா், தெற்கு மண்டலத்துக்குள்பட்ட சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் 8-க்கும் அதிகமான மதுக் கடைகள் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் மூடப்பட்டன.

இதுகுறித்து மதுரை மாவட்ட டாஸ்மாக் அலுவலா்கள் கூறியதாவது:

மதுரை மாவட்டத்தில் 50 டாஸ்மாக் கடைகள் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 9 கடைகளை மூட செவ்வாய்க்கிழமையன்றும், 31 கடைகளை மூட புதன்கிழமையன்றும் டாஸ்மாக் தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்தது. இதன்படி, அந்தக் கடைகளை மூடும் பணிகள் நடைபெறுகின்றன. அடுத்தடுத்து கிடைக்கப் பெறும் உத்தரவுகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.