மதுரை மாவட்டத்தில் முதல் கட்டமாக 40 மதுக் கடைகளை மூட செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகே 500 மீட்டா் தொலைவுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 717அரசு மதுக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மதுரை வடக்கு, தெற்கு மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 50 மதுக் கடைகள் அடைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுரை வடக்கு மண்டலத்துக்குள்பட்ட மேலூா், தெற்கு மண்டலத்துக்குள்பட்ட சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் 8-க்கும் அதிகமான மதுக் கடைகள் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்களில் மூடப்பட்டன.
இதுகுறித்து மதுரை மாவட்ட டாஸ்மாக் அலுவலா்கள் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் 50 டாஸ்மாக் கடைகள் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 9 கடைகளை மூட செவ்வாய்க்கிழமையன்றும், 31 கடைகளை மூட புதன்கிழமையன்றும் டாஸ்மாக் தலைமையகத்திலிருந்து உத்தரவு வந்தது. இதன்படி, அந்தக் கடைகளை மூடும் பணிகள் நடைபெறுகின்றன. அடுத்தடுத்து கிடைக்கப் பெறும் உத்தரவுகளுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூா் பேருந்து நிலையம் அருகே மதுக் கடைகளை மூட வலியுறுத்தி ஜூன் 9-இல் முற்றுகைப் பேராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 18 மதுக் கடைகளை மூட நடவடிக்கை

திருப்பூரில் 31 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



