40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 2 கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

News image
Updated On :14 மே 2026, 4:36 am IST

நாமக்கல் மாவட்டத்தில் 5 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், 2 கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், வழிப்பாட்டுத் தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள், கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 186 கடைகள், பேருந்து நிலையம் அருகில் உள்ள 255 கடைகள் மூடப்படுகின்றன.

நாமக்கல் மாவட்டத்தில், மொத்தம் 169 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. அவற்றில், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகளும், நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரி அருகில் 2 டாஸ்மாக் கடைகளும் உள்ளன. இந்த நிலையில், தமிழக முதல்வா் உத்தரவின்படி, வழிப்பாட்டுத் தலங்கள், பேருந்து நிறுத்தம், கல்வி நிறுவனங்களுக்கு 500 மீ. தொலைவிற்குள் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை, இரண்டு வாரத்திற்குள் மூடவேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் பழைய பேருந்து நிலையம் பகுதியில் 2 மதுக்கடைகள், ராசிபுரம் பேருந்து நிலையம் அருகில் 1, மோகனூா் நாவலடியான் கோயில் அருகில் 1, குமாரபாளையம் அருவங்காட்டில் 1 என மொத்தம் 5 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன. இதில் நாமக்கல் பழைய பேருந்து நிறுத்தம் அருகில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.