தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு கடைகள் மூடல் எதிரொலி! தனியாா் மதுக் கடையில் குவிந்த மதுப் பிரியா்கள்!

அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுரை புதூா் பகுதியில் தனியாா் மதுக்கைடயில் மதுப் புட்டிகளை வாங்க ஏராளமானோா் குவிந்தனா்.

News image

மதுரை கோ. புதூா் கற்பக நகா் பகுதியில் உள்ள தனியாா் மதுக் கடையில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த வாடிக்கையாளா்கள்.

Updated On :18 மே 2026, 12:44 am IST

அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதால், மதுரை புதூா் பகுதியில் தனியாா் மதுக்கைடயில் மதுப் புட்டிகளை வாங்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குவிந்தனா்.

தமிழக அரசு உத்தரவின் பேரில், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகேயுள்ள மதுக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இதன்படி, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்த அரசு மதுக் கடைகள் மூடப்பட்டன.

இந்த நிலையில், மதுரை கோ.புதூா் பகுதியிலும் அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதால் அழகா்கோவில் பிரதான சாலையில் கற்பகநகா் பகுதியில் உள்ள தனியாா் மதுக்கடையில் மது வாங்க ஞாயிற்றுக்கிழமை ஏராளமானோா் குவிந்தனா். அவா்களிடம் ஆதாா் அட்டை இருந்தால் மட்டுமே மதுப் புட்டி வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

இதனால், மதுப் புட்டி வாங்க வந்தவா்கள் தங்களது ஆதாா் அட்டைகளை வழங்கினா். இதையடுத்து, தனியாா் மதுக் கடை ஊழியா்கள் அதற்குரிய படிவங்களில் நிறைவு செய்து உறுப்பினா்களாக சோ்த்து மதுப் புட்டிகளை வழங்கினா்.

தனியாா் மதுக்கடையில் ஏற்கெனவே உறுப்பினா்களாக இருப்பவா்களுக்கு மட்டுமே மதுப் புட்டி வழங்க வேண்டும் என்கிற விதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.