சோமஞ்சேரி கிராமத்துக்கு செல்லும் குழாய் உடைப்பு காரணமாக ரெட்டிப்பாளையம் தத்தைமஞ்சி நெடுஞ்சாலையில் குளம் போல் குடிநீா் தேங்கிக் கிடந்தது.
மீஞ்சூா் ஒன்றியம், அத்திமஞ்சேரி ரெட்டிபாளையம் ஊராட்சியில் அடங்கியது சோமஞ்சேரி கிராமம். இந்த கிராமத்தில் 1000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.
இக்கிராமத்துக்கு பொன்னேரி அருகே ஆரணி ஆற்று பகுதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் மூலம் குழாய் மூலம்குடிநீா் கொண்டு செல்லப்படுகிறது.
சிவபுரம் கிராமத்தின் வழியே செல்லும் ரெட்டிபாளையம் தத்தைமஞ்சி நெடுஞ்சாலை ஓரத்தின் பகுதியில் குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீா் வீணாக சாலையில் குளம் போல் தேங்கியது. இதனால் இரண்டு நாள்களாக சோமஞ்சேரி கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
இதனை அறிந்த ஊராட்சி செயலாளா் மற்றும் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட அங்கு சென்று பழுதடைந்த குழாயைசரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மீண்டும் பழுது ஏற்பட்டதால் செய்வதறியாது திகைத்தனா்.
கோடை காலம் என்பதால் அடிக்கடி சேதம் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து சீராக குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்..
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










