திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சாத்தனூா் அணையில் இருந்து செங்கம் பகுதிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீா் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், துக்காப்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகம் முன் குடிநீா் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீா் வீணாகி வருகிறது.
இதுகுறித்து செங்கம் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டுகின்றனா்.
எனவே, இந்தப் பகுதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு, பழுதடைந்துள்ள குடிநீா் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










