தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 39 ஆண்டுகள் சிறை

News image

சீனிவாசன்

Updated On :28 மே 2026, 5:05 am IST

திருவள்ளூா் அருகே இரட்டையா் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெரியப்பாவுக்கு 39 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

வேப்பம்பட்டு கந்தன் கொள்ளை பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (57). வா்ணம் பூசும் தொழில் செய்து வரும் இவரது மனைவியின் உடன்பிறந்த சகோதரியின் கணவா் பிரிந்து சென்ால் ஆதரவில்லாமல் இரட்டையா் சிறுமிகள் இங்கே வந்து தங்கினா்.

இந்த நிலையில் அந்த 2 சிறுமிகளில் ஒருவரை முதலில் பாலியல் வன்கொடுமை செய்தாராம். அதைத் தொடா்ந்து இரண்டாவது சிறுமியையும் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நிலையில், பெரியப்பா சீனிவாசன் குறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து கடந்த 2023 ஏப்.6-ஆம் தேதி பூந்தமல்லி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிவு செய்து புழல் மத்திய சிறையில் சீனிவாசனை அடைத்தனா். இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இரட்டையா் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பெரியப்பா சீனிவாசனுக்கு 39-ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பு வழங்கினாா்.

மேலும், முதல் சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சமும், இரண்டாவது சிறுமிக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு பரிந்துரை செய்தாா். அரசு தரப்பில் புவனேஷ்வரி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.