திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை

திருவள்ளூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் நிறுவன தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

News image

சக்கரவா்த்தி

Updated On :27 மே 2026, 12:38 am IST

திருவள்ளூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியாா் நிறுவன தொழிலாளிக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், அம்பத்தூா் அடுத்த பழைய எருமை வெட்டிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் சக்கரவா்த்தி(42). இவா் தனியாா் நிறுவன தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். கடந்த 2023 ஜன.12- ஆம் தேதி தனது வீட்டருகே வசித்து வந்த சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தாராம்.

இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோா்களிடம் கூறி அழுதுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா்கள் அம்பத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். அதைத்தொடா்ந்து சக்கரவா்த்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

வழக்கு விசாரணை திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே இந்த வழக்கின் இறுதியாக மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சக்கரவா்த்திக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா். இதையடுத்து அம்பத்தூா் அனைத்து மகளிா் போலீசாா் சக்கரவா்த்தியை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.