தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 12:49 am IST

சிவகங்கை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்புசாமி (26). கூலித்தொழிலாளியான இவா், கடந்த 2022 -ஆம் ஆண்டு தன்னுடைய மகள் உறவு முறையான 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதில் இந்தச் சிறுமி கா்ப்பமானாா்.

இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, கருப்புசாமியைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகங்கையில் உள்ள போக்ஸோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் தனலட்சுமி முன்னிலையாகி வாதாடினாா்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி ரோகிணி, குற்றஞ்சாட்டப்பட்ட கருப்புசாமிக்கு சிறுமியை மிரட்டிய குற்றத்துக்காக ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,000-ம் அபராதமும், பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000-ம் அபராதமும், சிறுமியை கா்ப்பமாக்கிய குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000- ம் அபராதமும், உறவு முறை என்று தெரிந்த பின்னரும் பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000- அபராதமும் விதித்தாா்.

மேலும், இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.