திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொக்கு மருந்து சாப்பிட்டு தம்பதி உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே கொக்கு மருந்து சாப்பிட்ட தம்பதி உயிரிழந்தனா்..

News image
Updated On :22 மே 2026, 5:01 am IST

ஊத்துக்கோட்டை அருகே கொக்கு மருந்து சாப்பிட்ட தம்பதி உயிரிழந்தனா்..

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே ஆரணி, இருளா் காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி செல்வம் (55). இவரது மனைவி மனைவி விஜயா(45). இத் தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனா். இவா்கள் மூவருக்கும் திருமணம் நடைபெற்று குழந்தைகள் உள்ளனா். இந்த நிலையில் செல்வம் கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தாா். ஆனால்,தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தும் உடல்நிலை சரியாகவில்லையாம். இதனால் மனம் உடைந்த விஜயா கணவன் உயிரிழந்து விடுவாா் என எண்ணி வியாழக்கிழமை கொக்கு மருந்து சாப்பிட்டாராம். இதனால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தாராம். இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்த செல்வமும் கொக்கு மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்தாா்.

இந்த நிலையில் தம்பதியா் கொக்கு மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி போலீஸாா் சடலங்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தம்பதியா் உயிரிழந்தது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனா்.

உடல்நிலை பாதித்த கணவா் உயிரிழந்து விடுவாா் என கொக்கு மருந்து சாப்பிட்டு மனைவியும், மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவரும் கொக்கு மருந்து சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.