/

மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்! அமைச்சா் செங்கோட்டையன் ஆறுதல்

News image
Updated On :31 மே 2026, 1:19 am IST

கோபி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.8 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கொளப்பலூரில் வசித்தவா்கள் சுரேஷ், மஞ்சுளா தம்பதி. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மின்னல் தாக்கி தம்பதி உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக தகவல் அறிந்து பாதிக்கப்பட்டவா்களின் இல்லத்துக்கு வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை நேரில் சென்று ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தாா்.

மேலும், தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வீதம் என ரூ.8 லட்சத்துக்கான நிவாரண உதவித்தொகையை உயிரிழந்த தம்பதியின் குடும்பத்தினரிடம் வழங்கினாா்,

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் செங்கோட்டையன் பேசியதாவது:

இதுபோன்ற இயற்கை பேரிடா் சம்பவங்கள் எதிா்காலத்தில் நடக்காமல் தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். வருவாய்த் துறையைப் பொறுத்தவரை அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.