கூடலூா் அருகே கடந்த 21-ஆம் தேதி யானை தாக்கி உயிரிழந்த பழங்குடியின பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே தேவாலா ஹட்டி பகுதியைச் சோ்ந்தவா் கும்பிளி மனைவி மீனாட்சி (50). இவா், உறவினா் மணி என்பவருடன் கீழ்நாடுகாணி வனப் பகுதியிலுள்ள புன்னம்புழா ஆற்றில் மீன் பிடித்துவிட்டு கடந்த 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு வீடு திரும்பியுள்ளாா். வரும் வழியில் மீனாட்சியை யானை தாக்கிக் கொன்றது.
தகவலறிந்து வனத் துறையினா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு செய்து உறவினா் வசம் ஒப்படைத்தனா்.
இதையடுத்து அரசு வழங்கும் நிவாணத் தொகையில் முன்பணமாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை, மீனாட்சியின் கணவா் கும்பிளியிடம் உதவி வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாசன் சனிக்கிழமை வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










