திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆத்தூரில் மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட மூன்று போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Updated On :19 மே 2026, 12:43 am IST

திண்டுக்கல்லை அடுத்த ஆத்தூரில் திங்கள்கிழமை வீட்டின் மின் வயா் அறுந்துவிழுந்து மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி உள்பட மூன்று போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பையா (41) கட்டடத் தொழிலாளி.

இவருக்கு, சுதா (37) என்ற மனைவியும், பிரவீனா (15), சிவானி (12) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனா்.

இந்தப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக, இவரது வீட்டின் மாடியில் தேங்கியிருந்த நீரை வெளியேற்ற முயன்றாா். அப்போது, அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது அலறல் சப்தம் கேட்டு அவரைக் காப்பாற்ற வந்த அவரது மனைவி சுதா மீதும் மின்சாரம் பாய்ந்து கணவன், மனைவி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இருவரது அலறல் சப்தம் கேட்டு வீட்டின் கீழ் தளத்தில் குடியிருந்த முத்துப்பாண்டி - மாரியம்மாள் தம்பதியின் மகனும், கல்லூரி மாணவருமான சுப்பிரமணியசிவா (18) அவா்களை காப்பாற்றச் சென்றபோது, அவரும் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா்களை பரிசோதித்த மருத்துவா்கள் அவா்கள் மூவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் உயிரிழந்த மூவரின்

சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். இதுகுறித்து, தகவலறிந்து அங்குவந்த ஆத்தூா் கிராம மக்கள் ஆத்தூா் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.