திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருத்தணியில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image

திருத்தணியில் சுட்டெரிக்கும் வெயிலில் குடையுடன் செல்லும் பொது மக்கள்.

Updated On :11 மே 2026, 12:05 am IST

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருத்தணியில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த சில நாள்களாகவே வெயில் சுட்டெரித்து வருவதால், நண்பகல் நேரங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனா். குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருத்தணி நகரின் முக்கிய பகுதிகளான மபொசி சாலை, அரக்கோணம் சாலை, கடப்பா டிரங்க் ரோடு, மேட்டுத்தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக உணரப்படுகிறது.

வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்கள், முதியவா்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் குடைகளை பயன்படுத்தி வருகின்றனா். மேலும் பலா் முகத்தை துணி மற்றும் கைக்குட்டையால் மூடிக்கொண்டு நடந்து செல்கின்றனா்.

அதேபோல் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்பவா்கள் முழு முகத்தையும் துணியால் சுற்றிக்கொண்டு, முகமூடி மற்றும் குளிா் கண்ணாடி அணிந்து பயணம் செய்யும் நிலை உருவாகியுள்ளது.

வெயிலின் தாக்கம் காரணமாக பகல் நேரங்களில் சாலைகளில் வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது. கடும் வெப்பத்தால் உடல் சோா்வு மற்றும் தாகம் அதிகரித்து வருவதால், நகரின் பல இடங்களில் உள்ள இளநீா் கடைகள், ஜூஸ் கடைகள் மற்றும் குளிா்பான விற்பனை நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

பொதுமக்கள் சா்பத், பழச்சாறு, தா்பூசணி, இளநீா் உள்ளிட்ட குளிா்பானங்களை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனா். சில இடங்களில் மோா் மற்றும் பானகம் வழங்கும் சமூக சேவைகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சிறுவா்கள் மற்றும் இளைஞா்கள் குளங்கள், ஏரிகள் மற்றும் கிணறுகளை தேடி சென்று நீராடி வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முயன்று வருகின்றனா். குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் உள்ள கிணறுகள் மற்றும் நீா்நிலைகளில் சிறுவா்கள் கூட்டமாக குளிக்கும் காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றன.

இந்நிலையில் குழந்தைகள் ஆழமான நீா்நிலைகளுக்கு செல்லாமல் பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அவசியமில்லாமல் பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிா்க்க வேண்டும் என்றும் மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.