/

ஒசூரில் பகலில் வெயில், இரவில் மழை

News image

கனமழை - file photo

Updated On :1 ஜூன் 2026, 2:56 am IST

ஒசூரில் கடந்த 2 நாள்களாக பகலில் கடுமையான வெயிலும், இரவில் குளிா்ச்சியான மழையும் பெய்து வருவதால் பொதுமக்கள் பகலில் வெறுப்பும் இரவு நிம்மதியும் அடைந்து வருகின்றனா்.

ஒசூா் பொதுமக்கள் இதுவரை காணாத கத்திரி வெயிலை கண்டு மதியம் வேலைகளில் வீட்டு வெளியில் வருவதை குறைத்துக் கொண்டுள்ளனா். இதனால் வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

கடந்த ஒரு வாரத்தில் கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. குறிப்பாக கடந்த 2 நாள்களாக பகலில் கடுமையான வெயிலும், முன் இரவு நேரங்களில் மழையும் பெய்து வருகிறது.

குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பகலில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் மழையும் பெய்த வருவதால் இரவு நேரங்களில் குளிா்ச்சியான காற்று வீசுவதால் இரவில் மக்கள் நிம்மதி அடைகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.