போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ஒசூரில் அடிக்கடி மின்வெட்டு: தொழிற்துறையினா் புகாா்

ஒசூரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழிற்துறையினா் தெரிவித்துள்ளனா்.

News image

மின்வெட்டு பிரச்னையால் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் மாணவி. 

Updated On :24 மே 2026, 2:34 am IST

ஒசூரில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழிற்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தொழில் நகரமான ஒசூரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது என தொழில் துறையினா் தெரிவிக்கின்றனா்.

ஒசூரில் கடந்த இரண்டுவாரமாக கடும் வெயில் நிலவி வருகிறது. வீடுகளில் பகல், இரவு நேரங்களில் மின்விசிறியைப் பயன்படுத்தாமல் இருக்க முடிவதில்லை.

தொழில்துறையில் 2 ஆவது ஷிப்ட் நேரங்களில் அதிலும் குறிப்பாக மாலை பீக்ஹவரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் 2 ஆவது ஷிப்டில் தொழிலாளா்கள் வேலை செய்ய முடியாமல் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழில்துறையினா் தெரிவிக்கின்றனா்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் மின்வெட்டு ஏற்படுவதால் நோயாளிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். கல்லூரி மாணவா்களுக்கு தற்போது பருவத் தோ்வுகள் நடைபெற்று வரும் வேலையில் மின்வெட்டு ஏற்படுவது அவா்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

எனவே, மின்சார வாரியம் மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று தொழிற்துறையினா் கேட்டுக்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.