தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

News image
Updated On :27 மே 2026, 12:01 am IST

சித்தராமையாவுக்கு தேசிய அரசியலில் பொறுப்பு - மாநிலங்களவை உறுப்பினராகிறார்?

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் வந்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்து நேற்று 18 கல்குவாரிகளை உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, அம்பாசமுத்திரம் தொகுதி காலியானதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வரும் ஜூன் முதல் வாரம் வெளியிடப்போவதாக அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைவதால், தமிழக வெற்றிக் கழகத்தின் நம்பகத்தன்மை கெடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (மே 26) தெரிவித்தார்.

தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

தொகுதி மக்களின் நலனுக்காக அம்பாசமுத்திரம் அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்ததாக இசக்கி சுப்பையா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை பனையூரில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் இசக்கி சுப்பையா பேசியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் எதனையுமே செய்யவில்லை. ஆளும் கட்சியாக இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும். அதனால், தொகுதி மக்களின் நலனுக்காக தவெகவில் இணைந்துள்ளேன். எனக் குறிப்பிட்டார்.

அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா செய்து, தவெகவில் இணைவது ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளது.

அடிமை வணிகத்தை சட்டப்பூர்வமாக்கியதில் வாடிகனே பங்காற்றியதற்காகவும், பல நூற்றாண்டுகளாக இதைக் கண்டிக்கத் தவறியதற்காகவும் மன்னிப்புக் கோருவதாக போப் பதினான்காம் லியோ திங்கள்கிழமை தெரிவித்தார்.

திருச்செந்தூர் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!

உலகின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுசுகி, இயன்றவரை வீட்டிலிருந்தே வேலை, வெளிநாடுகளுக்கான பயணங்கள் தவிர்ப்பு போன்ற முக்கிய அறிவிப்புகளை அதன் ஊழியர்களுக்கு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 7 மணி வரை) சென்னை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, சேலம், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஓப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஏ6சி இந்தியாவில் இன்று (மே 26) அறிமுகமானது.

7,000mAh பேட்டரி திறன், 120Hz தொடுதிரை, இரட்டை கேமரா, அதீத நினைவகம் போன்றவை இதன் சிறப்புகளாக பார்க்கப்படுகின்றன.

எரிபொருள் விலையுயர்வால் மத்திய அரசின் மீது அனைத்துத் தரப்பு மக்களும் கடும் கோபத்தில் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்துள்ளது.

கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 26) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தில்லி முதல்வர் ரேகா குப்தாவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிக்கப்பட்டிருக்கும் ஒரே ஒரு புகைப்படம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. காரணம், அவர் அமர்ந்திருக்கும் நாற்காலிதான்.

சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளம் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று சென்னை ஐஐடி இயக்குநர் வி. காமகோடி தெரிவித்திருக்கும் நிலையில், சிபிஎஸ்இ தளம் பாதுகாப்பற்று இருப்பதாக மாணவர் ஏற்கனவே அனுப்பிய மின்னஞ்சல் அதிர்ச்சியளித்திருக்கிறது.

கடும் வெய்யிலில், 90 வயதான தன்னுடைய மாமியாரை, பழங்குடியினப் பெண் ஒருவர் 4 கி.மீ. க்கு முதுகில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அப்பெண்ணிடம் கேட்டதற்கு, அவர் கண்ணீருடன் அளித்த பதில் கேட்பவர்களை பதற வைத்தது.

தமிழ்நாட்டில் மே 30 வரை 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும், அதேசமயம் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நார்வே செஸ் தொடரில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக் உலக செஸ் சாம்பியனைத் தோற்கடித்தார்.

தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் புதன்கிழமை தில்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான லீடர் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டையில் இருக்கும் எழுத்துப் பிழைகள், இனிஷியல் மாற்றம், முகவரி போன்றவற்றை மாற்ற ஆதார் சேவை மையங்களுக்குச் செல்வோர், அங்கு பல மணி நேரம் காத்திருக்கத் தேவையில்லை.

செங்கல்சூளை உரிமையாளர்களிடம் மாமூல் கேட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தவெகவில் இருந்து ஒன்றியச் செயலர் விஜயகுமார் நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் 3 பேர் நேற்று ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்த நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையா ராஜிநாமா செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பெட்ரோல், டீசல் விலை 5-வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.