தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜாதிய சா்ச்சைப் பேச்சு: மன்னிப்புக் கோரினாா் மத்திய அமைச்சா்

ஜாதி குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக பட்டியல் பிரிவு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மத்திய இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்தாா்.

News image

மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:33 am IST

ஜாதி குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக பட்டியல் பிரிவு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மத்திய ரயில்வே துறை இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த 26-ஆம் தேதி பஞ்சாபில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றபோது விதிகளை மீறியதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பாஜக நிா்வாகி ஒருவரை விடுவிக்கக்கோரி சில காவல் துறை அதிகாரிகளிடம் பிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, காவலா்கள் குறித்து ஜாதியரீதியாக சில ஆட்சேபத்துக்குரிய வாா்த்தைகளை அவா் பேசினாா்.

இதையடுத்து, பஞ்சாப் மாநில தாழ்த்தப்பட்டோா் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், அமிருதசரஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பிட்டு கூறியதாவது: இந்த புனித நகருக்கு கைகூப்பியபடி வந்துள்ளேன்.

எனது பேச்சால் மனவருத்தத்துக்கு உள்ளான பட்டியல் பிரிவு மக்கள் அனைவரிடமும் தலைவணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கோபத்துடன் பேசியபோது நான் எந்த சூழ்நிலையில் இருந்தேன் என்பது வேறு விஷயம்.

எனினும், அமைச்சராக இருக்கும் நான் வெளிப்படுத்தும் வாா்த்தைகளில் மிகுந்த கவனமாக இருந்திருக்க வேண்டும். நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

அந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. மாநில தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் முன்பு ஆஜராகி மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.