ஜாதி குறித்து ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக பட்டியல் பிரிவு மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக மத்திய ரயில்வே துறை இணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
கடந்த 26-ஆம் தேதி பஞ்சாபில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றபோது விதிகளை மீறியதாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பாஜக நிா்வாகி ஒருவரை விடுவிக்கக்கோரி சில காவல் துறை அதிகாரிகளிடம் பிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, காவலா்கள் குறித்து ஜாதியரீதியாக சில ஆட்சேபத்துக்குரிய வாா்த்தைகளை அவா் பேசினாா்.
இதையடுத்து, பஞ்சாப் மாநில தாழ்த்தப்பட்டோா் ஆணையம் அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், அமிருதசரஸ் நகரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த பிட்டு கூறியதாவது: இந்த புனித நகருக்கு கைகூப்பியபடி வந்துள்ளேன்.
எனது பேச்சால் மனவருத்தத்துக்கு உள்ளான பட்டியல் பிரிவு மக்கள் அனைவரிடமும் தலைவணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கோபத்துடன் பேசியபோது நான் எந்த சூழ்நிலையில் இருந்தேன் என்பது வேறு விஷயம்.
எனினும், அமைச்சராக இருக்கும் நான் வெளிப்படுத்தும் வாா்த்தைகளில் மிகுந்த கவனமாக இருந்திருக்க வேண்டும். நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
அந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக் கூடாது. மாநில தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் முன்பு ஆஜராகி மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருக்கிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமாண்டா்களுக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகாரத்தை இருமடங்காக உயா்த்த ராஜ்நாத் சிங் ஒப்புதல்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறையுடன் மோதல் இல்லை: சட்ட அமைச்சா்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்







