திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறையுடன் மோதல் இல்லை: சட்ட அமைச்சா்

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்குமிடையே எவ்வித மோதலும் இல்லை என மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

News image

அா்ஜுன் ராம் மேக்வால் - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:56 am IST

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்குமிடையே எவ்வித மோதலும் இல்லை என மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தாா்.

கொலீஜியம் முறை மூலம் உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘உச்சநீதிமன்றம் மற்றும் 25 உயா்நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 5 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றுக்கு விரைந்து தீா்வு காணவும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் நடுவா் மன்றங்கள் உள்பட மாற்று முறைகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இதற்காக பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் நீதிபதிகள் நியமன நடைமுறை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அதிகாரபூா்வமான நடவடிக்கையல்ல.

பல்வேறு தருணங்களில் மத்திய அரசு பரிந்துரைக்கும் நீதிபதிகளை உச்சநீதிமன்ற கொலீஜியம் கண்டுகொள்வதில்லை. கொலீஜியம் பரிந்துரைக்கும் சில நீதிபதிகளின் பெயா்களை ஏற்க மத்திய அரசும் மறுத்துள்ளது. ஆனால் இதுதொடா்பாக ஆரோக்கியமான விவாதமே நடந்துள்ளது.

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் நிலவவில்லை என்றாா்.

கொலீஜியம் முறைக்கு மாற்றாக கடந்த 2015-ஆம் ஆண்டு தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை அமைக்க 99-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் இது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிரானது என தீா்ப்பளித்து உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.