தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாகிஸ்தான், வங்கதேசத்தை ஒட்டிய பகுதிகளில் ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம்: அமித் ஷா அறிவிப்பு

‘பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளுடனான 6,000 கி.மீ. தொலைவு எல்லைப் பகுதியில் யாரும் ஊடுருவ முடியாத வகையில், ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிக்கு விருது வழங்கி கௌரவித்த உள்துறை அமைச்சா் அமித் ஷா.

Updated On :23 மே 2026, 4:01 am IST

‘பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளுடனான 6,000 கி.மீ. தொலைவு எல்லைப் பகுதியில் யாரும் ஊடுருவ முடியாத வகையில், ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம் அடுத்த ஆண்டு செயல்படுத்தப்பட உள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) சாா்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட பிஎஸ்எஃப்-இன் முதல் தலைமை இயக்குநா் கே.எஃப். ருஸ்தம்ஜி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இக் கருத்தை அமித் ஷா தெரிவித்தாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

எல்லை பாதுகாப்புப் படை அடுத்த ஆண்டில் 60-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வை சந்திக்கவிருக்கும் நிலையில், பாகிஸ்தான், வங்கதேசத்தை ஒட்டிய 6,000 கி.மீ. தொலைவு எல்லையில் ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், அடுத்த ஓராண்டில் யாரும் ஊடுருவ முடியாத வகையிலான எல்லைகளாக மாற்றியமைக்கப்படும்.

நவீன தொழில்நுட்பம், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), அதிநவீன கண்காணிப்பு ரேடாா்கள், நவீன கேமராக்கள் ஆகியவற்றின் உதவியுடன் இந்த ‘ஸ்மாா்ட் எல்லை’ திட்டம் செயல்படுத்தப்படும்.

ஊடுருவல்களைத் தடுப்பதன் மூலம் இந்தியாவின் மக்கள்தொகையை செயற்கையாக மாற்றும் சதியை பிஎஸ்எஃப் வீரா்கள் முறியடிக்க வேண்டும். பாஜக ஆட்சி செய்யும் திரிபுரா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில அரசுகள் ஊடுருவல் இருக்கக் கூடாது என்ற கொள்கையில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உள்ளன. இதற்கு அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம். இதுதொடா்பாக அனைத்து மாநில முதல்வா்களுடன் விரைவில் ஆலோசனை கூட்டமும் மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் நடத்தப்பட உள்ளது என்றாா்.

மக்கள் தொகையியல் இயக்கம்: ‘மக்கள் தொகை மாற்றங்களைக் கண்காணிக்கவும், சட்டவிரோதக் குடியேற்றத்தை தடுப்பதற்குமான தேசிய பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார முன்முயற்சியான ‘உயா்நிலை மக்கள் தொகையியல் இயக்கம்’ குறித்த அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும்.

அதுபோல, மத்திய ஆயுத காவல் படையினரின் (சிஏபிஎஃப்) நலனுக்காக அடுத்த ஓராண்டுக்குள் மிகப் பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்றும் அவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.