திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பசு வதை தடை குறித்து பரிசீலிக்கவில்லை: மத்திய சட்ட அமைச்சா்

பசுவை தேசிய விலங்காக அறிவிப்பது குறித்தோ அல்லது பசு வதைக்குத் தடை விதிப்பது குறித்தோ மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை

News image

மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால்.

Updated On :31 மே 2026, 1:02 am IST

பசுவை தேசிய விலங்காக அறிவிப்பது குறித்தோ அல்லது பசு வதைக்குத் தடை விதிப்பது குறித்தோ மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை என சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும், பசு வதைக்கு நாடு தழுவிய தடை விதிக்கவும் ஜாமியத் உலாமா-இ-ஹிந்து அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மத்திய அரசை வலியுறுத்தினாா். இதை ஆதரிப்பதாக முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீத் அன்சாரி தெரிவித்தாா்.

இந்நிலையில், இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அா்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: பசு வதைக்குத் தடை விதிப்பது தொடா்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பெரும் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். இத்துடன் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி எம்பிக்களிடம் உள்ளூா் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. தற்போது இதுதொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இந்த விவகாரத்தை மத்திய அரசோ, கேபினட்டோ பரிசீலித்தால் செய்தியாளா்களிடம் வெளிப்படையாக கூறுவோம்.

தற்போது வரை உள்ளூா் சூழல்களுக்கேற்ப இந்த விவகாரங்களில் மாநில அரசுகளே முடிவெடுத்து வருகின்றன. அண்மையில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் அங்கு கால்நடைகளை பலியிடுவதற்கான விதிகள் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.