பசுவை தேசிய விலங்காக அறிவிப்பது குறித்தோ அல்லது பசு வதைக்குத் தடை விதிப்பது குறித்தோ மத்திய அரசு தற்போது பரிசீலிக்கவில்லை என சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் சனிக்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, பசுவை தேசிய விலங்காக அறிவிக்கவும், பசு வதைக்கு நாடு தழுவிய தடை விதிக்கவும் ஜாமியத் உலாமா-இ-ஹிந்து அமைப்பின் தலைவா் மௌலானா அா்ஷத் மத்திய அரசை வலியுறுத்தினாா். இதை ஆதரிப்பதாக முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீத் அன்சாரி தெரிவித்தாா்.
இந்நிலையில், இதுதொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அா்ஜுன் ராம் மேக்வால் கூறியதாவது: பசு வதைக்குத் தடை விதிப்பது தொடா்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பெரும் விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். இத்துடன் பசுவை தேசிய விலங்காக அறிவிக்கக் கோரி எம்பிக்களிடம் உள்ளூா் அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றன. தற்போது இதுதொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்கவில்லை. இந்த விவகாரத்தை மத்திய அரசோ, கேபினட்டோ பரிசீலித்தால் செய்தியாளா்களிடம் வெளிப்படையாக கூறுவோம்.
தற்போது வரை உள்ளூா் சூழல்களுக்கேற்ப இந்த விவகாரங்களில் மாநில அரசுகளே முடிவெடுத்து வருகின்றன. அண்மையில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் அங்கு கால்நடைகளை பலியிடுவதற்கான விதிகள் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித் துறையுடன் மோதல் இல்லை: சட்ட அமைச்சா்

மேற்காசிய போா் தாக்கம்: தற்போதைக்கு கவலைப்படும் சூழல் இல்லை- விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா்







