‘விபி- ஜி ராம் ஜி’ திட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அக் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஏழைகளுக்கு சாதகமான சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பாஜக ஆட்சியாளா்களுக்கு எப்போதுமே அக்கறை இல்லை. இந்நிலையில், ‘விபி-ஜி ராம் ஜி’ எனும் புதிய திட்டம் ஜூலை 1-ஆம் தேதிமுதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என்ற பெரும் நிதிச் சுமையை மாநிலங்கள் மீது மத்திய அரசு சுமத்தியுள்ளது.
எந்தெந்த மாநில அரசுகள் இத்திட்டத்தை அமல்படுத்தும் என்பது ஜூலை 1-ஆம் தேதிக்கு பிறகுதான் தெரியவரும். கிராமப்புற மக்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு மேற்கொண்ட மிக கொடூரமான நடவடிக்கை இது. பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவு கட்டப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

எரிபொருள் விலையேற்றம்: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

கம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



