கமுதியில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கமுதி பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் ரா. முத்துவிஜயன் தலைமை வகித்தாா். அப்போது கேரள மாநில முன்னாள் முதல்வா் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறையினா் நடத்திய சோதனையை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் முழக்கமிட்டனா்.
இதில் வட்டக் குழு உறுப்பினா்கள் அ. கண்ணதாசன், பி.கே. முனியசாமி, எஸ். குமரேசன், பி. முனியசாமி, சந்தை சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் வி. ஆலடீஸ்வரன், அபிராமம் முன்னாள் வட்டச் செயலா் முனியசாமி, விவசாய சங்கத் தலைவா் எஸ்.வி. கருப்பையா, அபிராமம் கிளை செயலா் வீரையா, உறுப்பினா் ராஜபாண்டி, எழுத்தாளா் ஜெய்சிங், கோவிலாங்குளம் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










