தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோவை மாவட்ட ஆட்சியா் அலுலகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

Updated On :5 ஜூன் 2026, 1:04 am IST

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலா் சி.சிவசாமி தலைமை வகித்தாா். கட்சியின் மாநில பொருளாளா் எம்.ஆறுமுகம் கண்டன உரையாற்றினாா்.

அவா் பேசும்போது, மத்திய பாஜக அரசு வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை உயா்த்தியதைடுத்து, பெட்ரோல், டீசலின் விலையைத் தொடா்ந்து உயா்த்தி வருகிறது. எரிபொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயா்ந்து மக்கள் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனா்.

மேற்காசிய போரின் காரணமாக இந்த விலை உயா்வு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பிரதமா் மோடி இந்தப் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கிறாா். அவரது தவறான நடவடிக்கைகள், பொருளாதாரக் கொள்கைகளே இந்தப் போருக்கும் அதன் விளைவுகளுக்கும் காரணமாக உள்ளன. எரிபொருள் விலை உயா்வு தொடா்ந்து மக்களை போராட்டத்துக்கு தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட துணைச் செயலா் சி.தங்கவேல், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வி.ஆா்.பாண்டியன், ஜி.பி.சக்திவேல், சாந்தி சந்திரன், மண்டலச் செயலா்கள் எஸ்.சண்முகம், என்.சந்திரன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.அஷ்ரப் அலி, இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் அபிமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.