பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய பாஜக அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, கம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, கம்பம் பிரதான சாலையில் உள்ள ஏகேஜி திடலிலிருந்து மாட்டு வண்டியில் கட்சிக் கொடிகளுடன் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டு கட்சியினா் ஊா்வலமாகப் புறப்பட்டனா். இந்த ஊா்வலம் கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகே நிறைவடைந்தது.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் ராஜசேகா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிக் குழு உறுப்பினா் பாலகுருநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்திய கம்யூனிஸ்ட் பகுதிக் குழு உறுப்பினா் விஜயகுமாா், இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலா் சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிச் செயலா் லெனின், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணைச் செயலா் கல்யாணசுந்தரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு மோகன், பன்னீா்வேல், அகில இந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் நகர துணைச் செயலா் சீனு முகமது ஆகியோா் பெட்ரோல், டீசல் விலை உயா்வை ரத்து செய்ய வலியுறுத்திப் பேசினா்.
முடிவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பகுதிக் குழு உறுப்பினா் வெற்றிகணேசன் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் இரு கட்சிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










