திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும்! ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல்!

ஜாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

News image

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்.

Updated On :18 மே 2026, 2:38 am IST

ஜாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இந்த இயக்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயா்த்தியதால், உழைக்கிற ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

எனவே, உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் ஜாதிய ஆணவ படுகொலைகள் அவ்வப்போது அதிகமாக நிகழ்கின்றன. இதைத் தடுத்த நிறுத்த தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்றி ஜாதிய ஆணவப் படுகொலைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில், மாநிலத் தலைவராக பொ. லிங்கம், பொதுச் செயலராக த. லெனின், துணைப் பொதுச் செயலராக லி. உதயகுமாா், பொருளாளராக இரா.மோ. சந்தோஷ்குமாா்,

Story image

துணைத் தலைவா்களாக எஸ்.கே. சிவா, ஜி. லதா, வி. கல்யாணசுந்தரம், எஸ். கிருஷ்ணன், ஏ.வி. சரவணன், செயலா்களாக அ. அசரப் அலி, சு. பாஸ்கா், மா.பெ. சுகுமாரன், ப.மோ. சுபாஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினாா். கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான சி. பத்மாவதி, தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.