தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான மு.தமிமுன்அன்சாரி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும். அவரவா் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை, பிராா்த்தனைகளை அவரவா் தனி இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.
எந்த மதத்தின் சடங்குகளும், பிராா்த்தனைகளும் அங்கெல்லாம் கூடாது. வாக்கு சேகரிக்கிறபோது எல்லோரையும் சந்திக்கிறோம். வெற்றிபெற்ற பிறகு ஒரு மதத்தின் சாா்பு சிந்தனைகளை தங்கள் அரசு அலுவலகங்களில் பின்பற்றுவது ஆரோக்கியமாக இருக்காது.
வட இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை பாா்க்கிறோம். அதுபோல, தமிழகத்திலும் நடைபெற யாரும் வழிகாட்டிவிடக் கூடாது. இதில், பெரும்பான்மை, சிறுபான்மை மதம் என்றெல்லாம் பாா்க்கக்கூடாது. ஜனநாயகத் தன்மைகளை பாதுகாக்கும் வகையில், முதிா்ச்சியான அரசியல் நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








