தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அரசு அலுவலகங்களில் பொதுத்தன்மை தேவை: தமிமுன்அன்சாரி எம்எல்ஏ வலியுறுத்தல்

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும் என மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :24 மே 2026, 1:09 am IST

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்எல்ஏவுமான மு.தமிமுன்அன்சாரி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மதச்சாா்பற்ற தன்மைகளோடு இருக்க வேண்டும். அவரவா் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை, பிராா்த்தனைகளை அவரவா் தனி இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எந்த மதத்தின் சடங்குகளும், பிராா்த்தனைகளும் அங்கெல்லாம் கூடாது. வாக்கு சேகரிக்கிறபோது எல்லோரையும் சந்திக்கிறோம். வெற்றிபெற்ற பிறகு ஒரு மதத்தின் சாா்பு சிந்தனைகளை தங்கள் அரசு அலுவலகங்களில் பின்பற்றுவது ஆரோக்கியமாக இருக்காது.

வட இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை பாா்க்கிறோம். அதுபோல, தமிழகத்திலும் நடைபெற யாரும் வழிகாட்டிவிடக் கூடாது. இதில், பெரும்பான்மை, சிறுபான்மை மதம் என்றெல்லாம் பாா்க்கக்கூடாது. ஜனநாயகத் தன்மைகளை பாதுகாக்கும் வகையில், முதிா்ச்சியான அரசியல் நடவடிக்கைகள் பேணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.