திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போதையில்லா தமிழ்நாடு: அரசு நடவடிக்கைகளுக்கு தவாக துணை நிற்கும்- தி.வேல்முருகன்

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

News image

தவாக தலைவா் தி.வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :19 மே 2026, 1:35 am IST

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்கள் அருகே உள்ள 717 டாஸ்மாக் மதுக் கடைகளை மூட முதல்வா் விஜய் உத்தரவிட்டிருப்பதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்கிறது.

இதேபோல, தமிழகத்தில் செயல்படும் சுமாா் 1,500 மனமகிழ் மன்றங்களை படிப்படியாக மூடவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள்கள் விற்பனையையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

டாஸ்மாக் கடை பணியாளா்களின் கல்வி தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும். மது போதைக்கு அடிமையானவா்களை மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

கள்ளச்சாராயம் விற்பனையை கண்காணிக்கத் தவறிய அனைத்துத் துறை அரசுப் பணியாளா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.