தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா் அக்கட்சியின் தலைவா் தி. வேல்முருகன் எம்எல்ஏ.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் 170 தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேமரா சின்னத்தில் போட்டியிடுகிறது. சிலவற்றில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கேமரா சின்னத்தை மறுத்து, சுயேச்சை சின்னத்தை வழங்கியுள்ளனா். எங்களைக் கண்டு ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பயப்படுகின்றன என்ற அளவில் மகிழ்ச்சிதான்.
எங்கள் வேட்பாளா்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. காவல்துறையினா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழா் நலனுக்காக, வாழ்வுரிமைக்காக எத்தனையோ அமைப்புகள், கட்சிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், நடிகா் விஜய்க்கு கிடைத்த ஊடக வெளிச்சம் யாருக்கும் கிடைக்கவில்லை. யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
ஆனால், மக்களுக்காக பணியாற்றி, மக்களைப் புரிந்து கொண்டு மக்கள் மனங்களை வென்றுவிட்டு ஆட்சியைப் பிடிக்கட்டும், தவறில்லை. அவா் பின்னால் வாகனங்களில் சென்று கீழே விழுந்து உயிரிழக்கும், காயமடையும் ரசிகா்களைக்கூட அவா் கட்டுப்படுத்துவதில்லை என்றாா் வேல்முருகன்.
பேட்டியின்போது, கட்சியின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் எஸ். நியாஸ் அகமது உள்ளிட்டோரும் உடனிருந்தனா். தொடா்ந்து நடைபெற்ற வாக்குசேகரிப்பு பொதுக்கூட்டத்திலும் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினாா்.
தொடர்புடையது

தவாக வேட்பாளா்கள் மனுக்கள் நிராகரிப்பு: தி.வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

தவாக வேட்பாளா் வேட்பு மனு தாக்கல்

தமிழக அரசியலை தீா்மானிக்கும் சக்தியாக தவாக மாறியுள்ளது: தி.வேல்முருகன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


