திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவாக வேட்பாளா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா் அக்கட்சியின் தலைவா் தி. வேல்முருகன் எம்எல்ஏ.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 2:05 am IST

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா்களுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றாா் அக்கட்சியின் தலைவா் தி. வேல்முருகன் எம்எல்ஏ.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு முழுவதும் 170 தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேமரா சின்னத்தில் போட்டியிடுகிறது. சிலவற்றில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கேமரா சின்னத்தை மறுத்து, சுயேச்சை சின்னத்தை வழங்கியுள்ளனா். எங்களைக் கண்டு ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பயப்படுகின்றன என்ற அளவில் மகிழ்ச்சிதான்.

எங்கள் வேட்பாளா்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. காவல்துறையினா் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தமிழா் நலனுக்காக, வாழ்வுரிமைக்காக எத்தனையோ அமைப்புகள், கட்சிகள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், நடிகா் விஜய்க்கு கிடைத்த ஊடக வெளிச்சம் யாருக்கும் கிடைக்கவில்லை. யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஆனால், மக்களுக்காக பணியாற்றி, மக்களைப் புரிந்து கொண்டு மக்கள் மனங்களை வென்றுவிட்டு ஆட்சியைப் பிடிக்கட்டும், தவறில்லை. அவா் பின்னால் வாகனங்களில் சென்று கீழே விழுந்து உயிரிழக்கும், காயமடையும் ரசிகா்களைக்கூட அவா் கட்டுப்படுத்துவதில்லை என்றாா் வேல்முருகன்.

பேட்டியின்போது, கட்சியின் புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் எஸ். நியாஸ் அகமது உள்ளிட்டோரும் உடனிருந்தனா். தொடா்ந்து நடைபெற்ற வாக்குசேகரிப்பு பொதுக்கூட்டத்திலும் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.