/

ரயில்டெல் நிறுவனத்தில் வேலை: 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர்

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:50 pm

ஆர். வெங்கடேசன்

மத்திய அரசு நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், முதன்மை மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கான (ஒப்பந்த அடிப்படையிலான) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

No. RCIL/2017/P&A/44/23
தேதி: 09.09.2017

மொத்த காலியிடங்கள்: 86

பணியிடம்: மேகாலயா, மிசோரம், திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Engineers - 48
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Sr. Manager - 30
சம்பளம்: மாதம் ரூ.24,900 - 50,500

பணி: Asst. General Manager - 08
சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் 55 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ, டிகிரி, எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.200, மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.railtelindia.com/JobFiles/Vacancy%20notice-detiled%20-%20NER.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.