ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!
ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ், அதன் பங்கு விற்பனையின் இறுதி நாளான இன்று 43.66 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.


புதுதில்லி: பருத்தி நூல் உற்பத்தியாளரான ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ், அதன் பங்கு விற்பனையின் இறுதி நாளான இன்று 43.66 மடங்கு வரையான விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக இன்று தெரிவித்தது.
ரூ.110.24 கோடி மதிப்புள்ள ஐபிஓ மூலம் 1,06,00,000 பங்குகளுக்கு நிகரான 46,28,41,632 விண்ணப்பங்களை பெற்றதாக தேசிய பங்குச் சந்தை குறியீட்டான நிஃப்டி-யின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தனி நபர் குறைந்தபட்சம் 144 ஈக்விட்டி பங்குகளுக்கும் அதற்கு மேற்பட்ட பங்குகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு மூலம் 220.30 மடங்கு சந்தாவைப் பெற்ற நிலையில், முதலீட்டாளர்களுக்கான தனிநபர் ஒதுக்கீடு மூலம் 76.63 மடங்கு சந்தாவைப் பெற்றது. இதில் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 3.94 மடங்கு சந்தாவைப் பெற்றது.
மொத்தம் 1,06,00,000 பங்குகள் விற்பனைக்கு வந்த நிலையில், அதன் விலை வரம்பு பங்கு ஒன்றுக்கு தலா ரூ.95 முதல் ரூ.104 என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம், ஐபிஓவிலிருந்து கிடைக்கும் வருமானத்தை, ரூ. 39 கோடி செலவில் 4.2 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தை அமைப்பதற்குப் பயன்படுத்தும். மேலும் ரூ.14.89 கோடி கடன்களை திருப்பிச் செலுத்தவும், ரூ.44 கோடி செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்காகவும், மீதமுள்ள தொகை பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படும்.
செப்டம்பர் 2025 உடன் முடிவடைந்த ஆறு மாதங்களில், நிறுவனம் ரூ.7 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தையும், செயல்பாடுகள் மூலம் ரூ.132.08 கோடி வருமானத்தையும் ஈட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...