ஏரி காத்த ராமராக மக்கள்
ஏரிகள் நாடு என பின்லாந்தும், ஏரிகள் மாவட்டம் என்று அன்றைய செங்கல்பட்டு மாவட்டமும் பள்ளிப் பாடத்தில் குறிக்கப்பட்டிருக்கும். வெளிநாடு சென்று பின்லாந்திலுள்ள ஆயிரக்ககணக்கான ஏரிகளைக் காண முடியாவிட்டாலும், தமிழ்நாட்டிலுள்ள நம் மண்ணின் ஏரிகளை இளைய சமுதாயம் பார்த்து அனுபவிக்க, பயனடைய பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு நம்முள் எழ வேண்டும்.








