மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

காலை எழுந்தவுடன் செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி...

News image

ENS

Updated On :25 பிப்ரவரி 2026, 1:00 pm

காலையில் எழுந்தவுடன் உடல் ஆரோக்கியத்திற்காக சில பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

காலையில் எழுந்தவுடன் ஒரு காபி அல்லது டீயைக் குடித்துவிட்டு அன்றாட வேலைகளைத் தொடங்குவதுதான் பலருக்கும் வழக்கமாக இருக்கிறது.

Story image

IANS

ஆனால், உடல்நிலையைக் கருத்தில்கொண்டு ஆரோக்கியமான உடல் மற்றும் மன நலத்திற்கு நாம் காலையில் எழுந்தவுடன் சில விஷயங்களை கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அவ்வாறு செய்யும்போது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துடன் இப்போது பலருக்கும் பிரச்னையாக உள்ள தூக்கக் கோளாறுகளை சரிசெய்யும் என்று ஆய்வுகளும் கூறுகின்றன.

Story image

ENS

சூரிய ஒளி தேவை

காலையில் எழுந்தவுடன் சூரிய ஒளியை உடல் பெற வேண்டும். காலையில் உடலில் சூரிய ஒளி படும்போது உடலில் இயங்கும் கிர்காடியன் ரிதம் சக்திவாய்ந்ததாக இருக்கும். உங்களுடைய உடல் சிறிதளவு சூரிய ஒளியை உட்கிரகித்தாலே இரவில் உங்களுடைய தூக்கத்தை மேம்படுத்தும். உங்களுடைய மூளையின் செயல்பாட்டையும் ஊக்குவிக்கும். ரிலாக்ஸாக உணர வைக்கும்.

காலை 10 மணிக்கு முன்னதாக 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் இருப்பது தூக்கத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

Story image

ANI

போன் வேண்டாம்

இரவில் தூக்கத்திற்கு முன்பும் சரி, காலையில் எழுந்தவுடனும் சரி பெரும்பாலும் அனைவரின் கையிலும் போன் இருக்கும். வேலை சார்ந்து அல்லது பொழுதுபோக்கு சார்ந்து நீங்கள் போனை பயன்படுத்தலாம். ஆனால், காலை எழுந்ததும் குறைந்தது 45 நிமிடங்களுக்கு ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் ஸ்மார்ட்போனில் இருந்து வரும் ஒளி, உடலில் மன அழுத்தத்திற்கான ஹார்மோனைத் தூண்டுகிறது.

நீங்கள் காலையில் செய்யும் ஒரு விஷயம் இரவில் உங்கள் தூக்கத்தைப் பாதிக்கும். அதேபோல இரவு தூங்கும்முன்பும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக போனை ஒதுக்கிவைத்துவிட அறிவுறுத்துகிறார்கள்.

காலை உடற்பயிற்சி

இப்போது உடல் இயக்கம் சரியாக இல்லாததால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதனால் காலையில் எழுந்தவுடன் சிறிது நேரம் நடப்பது, ஓடுவது என லேசான உடற்பயிற்சிகளைச் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகிறது, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, இதனால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.

<P>HEALTHY-FOOD094704.JPG</P>

<P>HEALTHY-FOOD094704.JPG</P> - Center-Center-Chennai

காலை உணவு

காலை உணவைத் தவிர்ப்பது மிகவும் மோசமானது என்று அறிவுறுத்தும் மருத்துவர்கள், காலை உணவை சீக்கிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்கின்றனர். அதிலும் காலை உணவு முட்டை, தயிர், நட்ஸ் என புரதம் நிறைந்த உணவாக இருக்க வேண்டும், கார்போஹைடிரேட், நல்ல கொழுப்புகள் என மற்ற சத்துகளுடன் கூடிய சமச்சீரான உணவு வேண்டும். நள்ளிரவு சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

Story image

ENS

காலை எழுவது

இரவில் தாமதமாகத் தூங்கினாலும் காலையில் ஒரே நேரத்தில் எழுவதை வழக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். காலையில் 6 மணிக்கு என்றால் தினமும் காலை 6 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்களுக்கு வேண்டுமானால் நேரத்தை சற்று தளர்த்திக்கொள்ளலாம்.

Summary

Do these 5 things as soon as you wake up in the morning for better health

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.