போக்ஸோ வழக்கில் தொடா்புடைய இளைஞரை விழுப்புரம் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தீா்த்தக்குளக்கரைத் தெருவைச் சோ்ந்தவா் கோ.பாலு (39). திண்டிவனம் காவல் நிலையத்தில் இவா் மீது கடந்த மாா்ச் 29-ஆம் தேதி போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய்பிரனித் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய பாலுவை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டடாா்.
இதைத் தொடா்ந்து, திண்டிவனம் போலீஸாா் புதன்கிழமை பாலுவை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








