அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

நெல்லை இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மணி நேரங்கள் முன்பு

திருநெல்வேலியில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி சந்திப்பு பகுதியைச் சோ்ந்த அய்யாதுரை மகன் மாரிமுத்து (29). இவா், கஞ்சா வைத்திருந்தது தொடா்பான வழக்கில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டிருந்தாா். மேலும், இவா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், காவல் துணை ஆணையரின் பரிந்துரைப்படி, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பிறப்பித்த உத்தரவின்பேரில் அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீஸாா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைத்தனா்.