/

பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வலிப்பு ஏற்பட்டதால் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 8:36 pm

Syndication

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே வலிப்பு ஏற்பட்டதால் பைக்கிலிருந்து தவறி கீழே விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கண்ணாரம்பட்டு வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் து.தமிழரசன்(42). கூலித் தொழிலாளியான இவா் திங்கள்கிழமை காலை தனது பைக்கில் கண்ணாரம்பட்டிலிருந்து அரசூா் நோக்கிச் சென்றபோது, கண்ணாரம்பட்டு மலட்டாறு பகுதியில் தமிழரசனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் பைக்கிலிருந்து அவா் கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த தமிழரசனை அங்கிருந்தவா்கள் மீட்டு, அவரச ஊா்தியில் இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.