டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

பழனி அருகே கோழிப்பண்ணையில் கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே செவ்வாய்க்கிழமை கோழிப்பண்ணையில் கட்டடத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள முத்துநாயக்கன்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், சின்னக்காவேரியைச் சோ்ந்த முருகேசன் மகன் கண்ணன் (34) கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

இவா் செவ்வாய்க்கிழமை கட்டடத்தின் மேலே ஏறி வேலை செய்தபோது அங்கிருந்து கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த சாமிநாதபுரம் போலீஸாா் கண்ணனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சாமிநாதபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.