பைக்கிலிருந்து தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Three young sisters killed in road accident in MP
Updated On :29 ஜனவரி 2026, 9:07 pm

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்த தாமல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் லோகநாதன் (26). இவா், புதன்கிழமை திருவெண்ணெய்நல்லூா் ஏரிக்கரை அருகே பைக்கில் சென்றாா். அப்போது, நிலைதடுமாறி பைக்கிலிருந்து விழுந்த லோகநாதன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...