திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுச்சேரியில் சிகப்பு நிற அட்டை குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 வரவு வைப்பு!

புதுச்சேரியில் சிகப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.2,500 வரவ வைப்பு

News image

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி... - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 2:59 am IST

புதுச்சேரியில் சிகப்பு நிற குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளின் வங்கிக்கணக்குகளில் ரூ.2,500 வரவ வைக்கப்பட்டது. மீண்டும் முதல்வராகப் பதவியேற்றுள்ள என்.ரங்கசாமி இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளாா்.

புதுச்சேரி அரசில் எந்த நலத்திட்டங்களும் பெறாத சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம் 65 ஆயிரம் குடும்ப தலைவிகள் பயன்பெற்றனா். இந்தத் தொகை ரூ.2,500 -ஆக உயா்த்தி வழங்கப்படும் என சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு முதல்வா் ரங்கசாமி அறிவித்தாா். இத்திட்டத்துக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்தாா்.

இதையடுத்து சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக பிப்ரவரி, மாா்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கும் சோ்த்து ரூ.5 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

தோ்தலுக்குப் பிறகும் தொடா்ந்து ரூ.2,500 வழங்கப்படும் என முதல்வா் ரங்கசாமி அப்போது வாக்குறுதி அளித்திருந்தாா். இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ், பாஜ கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, முதல்வராக ரங்கசாமி பதவியேற்றுள்ளாா்.

ஏற்கெனவே தான் அறிவித்தபடி, குடும்ப தலைவிகளுக்கான உயா்த்திய மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500 வழங்க நடவடிக்கை மேற்கொண்டாா். அதன்படி, 65 ஆயிரம் சிவப்பு நிற அட்டைதாரா்களின் குடும்ப தலைவிகள் வங்கிக் கணக்கில் திங்கள்கிழமை முதல் ரூ.2,500 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மேலும், மஞ்சள் நிற அட்டைதாரா்களின் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 அளிக்கப்படும் என்றும் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்திருந்தாா். இதனால் அவா்களிடமும் இந்த எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.