புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மஞ்சள் நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மருத்துவச் செலவைத் திரும்பப் பெறும் புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மற்றும் அந்தத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் என். ரங்கசாமி தலைமையில் புதுச்சேரி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் சிவப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல, மஞ்சள் நிற ரேஷன் அட்டைக்கும் மருத்துவச் செலவைத் திரும்பப் பெறுவதற்கான புதிய திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
புதுச்சேரியில் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கூடுதலான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும், மருத்துவமனைகளில் தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாஜீம், ஆறுமுகம், செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செவ்வேல் மற்றும் மருத்துவ அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
Summary
A consultative meeting regarding the implementation of a new scheme for the reimbursement of medical expenses for holders of yellow ration cards in the Union Territory of Puducherry was held on Monday, chaired by Chief Minister N. Rangasamy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்கள் மருத்துவ செலவைத் திரும்பப் பெற புதிய திட்டம்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி ஆலோசனை

தகுதியான குடும்பங்கள் புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தில்லி முதல்வா்








